Friday, January 8, 2010

கடந்து வந்த பாதை ...

நான் கடந்து வந்த வாழ்க்கை என்ன என்று எண்ணி பார்க்க
விளைந்தேன் ... திரும்பிப் பார்க்கிறேன் இன்று....


ஒரு வயதில், தவழ்ந்து நகர்ந்த காலத்தில்,
ஓடித் திரிந்த எறும்பை,
பிடித்துத் தின்ற ஞாபகம்....


இரண்டு வயதில், தடுக்கி விழுந்து நடந்த நேரத்தில் ,
கையில் கிடைத்த பொருளை,
தூக்கி எறிந்த ஞாபகம்....


ஐந்து வயதில், துள்ளி ஓடிய வயதில்,
எதிர் வீட்டு ஜன்னலை,
உடைத்து விட்ட ஞாபகம்....


ஏழு வயதில், அப்பா மிதிவண்டி ஓட்டி,
தவறி கீழே விழுந்து,
கையை உடைத்துக் கொண்ட ஞாபகம்.....


பத்து வயதில், பள்ளிக்கூட பருவத்தில்,
பக்கத்து வீட்டு கொய்யா மரத்தில் ,
பழம் திருடித் தின்ற ஞாபகம்.....


பன்னிரண்டு வயதில், பள்ளிக்கூட நேரத்தில்,
மேஜையின் மேல் இருந்து கீழே விழுந்து,
மண்டையை உடைந்துக் கொண்டஞாபகம்....


பதினைந்து வயதில், பதின்ம வயதில்,
நண்பர் கூட்டம் சேர்த்து,
முதன்முதலாய் ஊர் சுற்றிய ஞாபகம்......


பதினெட்டு வயதில், கல்லூரிப் பருவத்தில்,
வேகமாய் வாகனம் ஒட்டி,
வித்தைகள் செய்த ஞாபகம்....


இருபது வயதில், ஒரு கூட்டம் சேர்த்து,
நண்பர் வீட்டில் இரவில் ஒன்றாய்,
கூடிக் களிக்த ஞாபகம்....


இருபத்திரண்டு வயதில், கல்லூரி இறுதி நாளில்,
நண்பர் கூட்டம் சேர்ந்து,
ஒன்றாய் எடுத்த புகைப்படம் ஞாபகம்....


இருபத்திமூன்று வயதில், இரவு முழுதும் அலுவலகத்தில்,
என்றும் என் கணிப்பொறியுடன்,
வேலை என்று சொல்லி கழித்த ஞாபகம்...


இன்னும் என் வாழ்கையில் எத்தனை ஞாபகங்கள்...
எண்ணிப் பார்க்கிறேன் அதனை, எத்தனை இனிமை அதனில்,


இன்னும் பல வருடம் வாழ வேண்டும் என்று என்னுள் நினைத்துக் கொள்கிறேன்,
திரும்பிப் பார்க்கும் இந்த இனிமை என்றும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.....


..................பாதை தொடரும்......

1 comment:

Thirumalaisamy Thangavel said...

Enna machi unnoda kaathal ellam neyabagam illiya ;)