Friday, January 8, 2010

காதல்.....

எங்கோ எதிலோ படித்தது.....


முள் இல்லாத ரோஜாவை தூவுங்கள் என் மரண ஊர்வலத்தில்....
வந்தாலும் வருவாள் " என் காதலி ",
பாவம் அவளின் பாதங்கள்......


என் இதயம் துடிக்கிறதோ இல்லையோ...
நன்றாக நடிக்கிறது,
உன்னை மறந்து விட்டேன் என்று....


உடைந்து போன வளையல்,
தவறி விழுந்த கொண்டை ஊசி,
அவள் முகம் துடைத்த கைக்குட்டை,
அறுந்து விழுந்த பாசி மணி,
மை தீர்ந்த பேனா என,
அத்தனையும் இருக்கிறது என்னிடம்,
அவளைத் தவிர.......


ஒரு முறை
உன் வீட்டு ஆளுயர கண்ணாடியில்...
நீ உடை மாற்றும் போது...
நீயே உன்னை பார்...?
பிறகு புரியும் உனக்கும்,
உன் அழகு என்னை எப்படி எல்லாம்
சித்ரவதை செய்கிறது என்று..!


என்றாவது ஒரு நாள்,
நீ என்னை பார்க்க நேர்ந்தால் ,
உன் கணவனிடம் அறிமுகம் செய்,
இவன் தான் என்னால் சாகடிக்கபட்டவன் என்று!!!!!


காதலித்துப் பார் , கவிதை வரும் என்று சொன்னார்கள்,
கண்ணீர் வரும் என்பதை ஏன் எனக்குச் சொல்ல வில்லை,...


இரவு முழுவதும் அழுத என் கண்களுக்கு,
விரல் மட்டுமே ஆறுதல் சொல்ல வந்தது,
மனம் வர வில்லை.....

ஒரு முறை
உன் வீட்டு ஆளுயர கண்ணாடியில்...
நீ உடை மாற்றும் போது...
நீயே உன்னை பார்...?
பிறகு புரியும் உனக்கும்,
உன் அழகுகள் எல்லாம் எப்படி சித்ரவதை
செய்கிறது என்று..!


*********************************************************

*********************************************************
உனக்குக் காதலி கிடைக்கவில்லை என்று கவலைப்படாதே,
அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகக் கூட இருக்கலாம்.....


*********************************************************

*********************************************************


அடி பெண்ணே,
குப்பைதொட்டி கூட என்னை காதலித்து இருக்கும்
நீ கிழித்துப் போட்ட என் காதல் கடிதங்களை படித்து இருந்தால்...




..................................... கவிஞன்...

5 comments:

மதன்ராஜ் மெய்ஞானம் said...

மாப்ள.. actually காதல்னு ஒண்ணு இல்லவே இல்ல.. Does not exist..

...
...

X chromosome, Y chromosome, XX, YY, XY.. வெறும் organic chemistry.. அவ்ளோதான் சமாச்சாரமே.. :-)

அட.. சொல்ல வந்தத மறந்துட்டேன்... நல்ல பீல் பண்ணிருக்க... நைஸ்.. கீப் ரைட்டிங்..

yuva said...

dai machan...the problem is these are not mine....read the first line....

மதன்ராஜ் மெய்ஞானம் said...

இதான் மாப்ள அந்த கரிம வேதியியல் எபெக்ட்...

//ஒரு முறை
உன் வீட்டு ஆளுயர கண்ணாடியில்...
நீ உடை மாற்றும் போது...
நீயே உன்னை பார்...?
பிறகு புரியும் உனக்கும்,
உன் அழகுகள் எல்லாம் எப்படி சித்ரவதை
செய்கிறது என்று..! //

Thirumalaisamy Thangavel said...

enna machi.. ore peelingsah elutheerukka.. Nice one da.

Unknown said...

hahaha

v.good