Sunday, October 12, 2008
முத்தம்..
என்னவளே,
உன்னை எனக்கு மொத்தமாய்
தராவிட்டாலும் பரவாயில்லை,
ஒரு முத்தமாவது கொடுத்து விடு...
.
.
.
உன் முத்தம் மிகப் பெரிய பொக்கிஷம்,
தொலைத்து விடுவாய் எனில்,
என் உதடுகளில் பத்திரமாய் சேர்த்து வை...
உனக்கு வேண்டும் பொழுது கண்டிப்பாக திருப்பிக் கொடுத்து விடுகிறேன்....
.
.
.
தைரியமாக எனக்கு முத்தம் கொடு,
முத்த மழையில் நனைந்தால் யாருக்கும் ஜுரம் பிடிக்காதாம்....
.
.
.
உன் உதடுகளில் என்ன பக்குவம் வைத்திருக்கிறாய்,
ஒவ்வொரு முறை முத்தமிடும் பொழுதும்
சுவை கூடிக் கொண்டே போகிறதே....
.
.
.
ஒவ்வொரு முறை முத்தமிடும் பொழுதும்,
மனிதனுக்கு ஆயுள் 10 நிமிடம் கூடுமாம்!!!
அன்பே, வா நாம் இருவரும் சாகா வரம் பெறுவோம்....
.
.
.
வருடத்திற்கு ஒரு முறை தான் சொர்க்க வாசல் திறக்குமாம்,
யார் சொன்னது,
உன் இதழ்கள் ஒன்று சேர்ந்து என்னை
முத்தமிட்டு பின் திறக்கும் ஒவ்வொரு முறையும்,
எனக்கு சொர்க்க வாசல் திறப்பு தான்....
.
.
.
உலகத்திலேயே மிக பயங்கரமான ஆயுதம் அணுகுண்டு தானாம்...
உன் இதழ்கள் பற்றி இன்னும் யாருக்கும் தெரியவில்லை போலும்...
.
.
.
இப்படிக்கு,
இதயத்தில் ஆரம்பித்து இதழ்களில் முடியும் முத்ததிற்காக காத்திருக்கும் ஒருவன்......
4 comments:
thala...pinniteenga ponga....ungalukku antha mutham seekirama kidaika ennoda vaalthukal....
Paradesi...
சூப்பர் மச்சி.. கவிதையெல்லாம் கலக்கல்..
கமலகாசன் அப்புறம் நீங்கதான்..
Bonjorno, yuvablogs.blogspot.com!
[url=http://cialisybea.pun.pl/ ]Vendita cialis generico[/url] [url=http://athe.pun.pl/ ]Compra generico[/url] [url=http://viagraradf.pun.pl/ ]Compra viagra in Italia[/url] [url=http://viagraonline.pun.pl ]Acquisto viagra [/url] [url=http://viagracqui.pun.pl/ ]Acquisto viagra [/url] [url=http://cialisenta.pun.pl/ ]Comprare cialis in Italia[/url]
Post a Comment