Wednesday, October 8, 2008

காதல் பரிசு...

என்னுடைய கல்லூரி இரண்டாம் ஆண்டில் நான் எழுதிய கவிதை இது...முழுமையான கவிதை நினைவில் இல்லை.....சிதறிய பாகங்களின் தொகுப்பு இதோ.......


எளிதான பாடத்திலா தோல்வி அடைந்தாய்
என என்னை பார்த்து ஏளனம் செய்கிறாயே,

நீ என்னிடம் வந்து பேசும் இந்த வார்த்தைகளுகாகத்தான்
நான் தோல்வி அடைந்தேன், என்று எப்படி உன்னிடம் கூறுவது....
.
.
.
இந்த சாதாரண கணக்கு கூட புரியவில்லையா என்று
தலையில் செல்லமாய் குட்டினாயே,

உன் கைகள் என் மேல் படுவதற்காகத்தான்
நான் புரியாமல் நடிக்கிறேன், என்று எப்படி உனக்கு புரிய வைப்பது...
.
.
.
பொது அறிவுப் போட்டியில், உனக்கு முன் நான் தான் விடை அளித்தேன்
என்று பெருமிதம் பொங்க சிரிக்கிறாயே,

இந்த சிரிப்புக்காகத்தான் நான் விடை தெரிந்தும்
சொல்லாமல் இருந்தேன், என்று எப்படி உன்னிடம் சொல்லுவது.....
.
.
.
.
.
.
.

இப்படி,
நீ வெல்வதற்காகவே , நான் தோற்கிறேன்....
நீ சிரிப்பதற்காகவே, நான் மௌனம் ஆகிறேன்....

இருந்தும்,
என்னை விட்டு ஏன் இன்று பிரிந்து செல்கிறாய்....

இதுதான்,
எவரிடமும் தோற்காத நான்,
உன்னிடம் தோற்றதற்கு நீ தரும் முதல் பரிசோ....




..........................................................................................................ஒரு கவிஞன்.

1 comment:

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Monna nayi... kadala poda kanakkula fail aakittu peelinga potrukku...

Nalla irukkuda nanba...