Saturday, December 10, 2011

வரன் தேடும் படலம்..

எப்படி டா பொண்ணு வேணும்னு அம்மா கேட்டாங்க...

வைரமுத்து பாணியில் " மின்னலை பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனம் போல்" என்று சொல்லவா,

இல்ல

தாமரை பாணியில் "அவள் பழகும் விதங்களை பார்க்கையில், பல வருஷ பரிச்சயம் போல இருக்கனும்" என்று சொல்லவா,

இல்ல

நா முத்துக்குமார் பாணியில் "அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பறந்தாலும் , அவள் போல இருக்காது ...அப்படி ஒரு பொண்ணு வேணும் " என்று சொல்லவா

இல்ல


பா விஜய் பாணியில் "இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல் " என்று சொல்லவா

.
.
.

ஹ்மம்ம்மம்ம்ம்ம்


எதுவுமே வேணாம்,


"அம்மா உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி, நம்ம வீட்டுக்கு ஒரு மருமகள் இல்ல , மகளை தேடுங்கனு சொன்னேன்"


இத விட ஒரு அம்மாக்கு எப்படி சந்தோசத்த குடுக்க முடியும்...


என் அம்மாவ விட வேற யாரால நல்ல பொண்ண பாக்க முடியும்....:) :)

No comments: